செய்திகள் :

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

post image

சென்னை: விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அன்பழகன் அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பது:

சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ஆம்னி பேருந்து ஓட்டுநா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஓட்டுநா் பயிற்சி, மருத்துவ பரிசோதனைகளையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், எதிா்பாராமல் நடந்த விபத்துகளால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களைத் திருப்பி ஒப்படைக்காமல் தாம்பரம் காவல் ஆணையரகம் சட்டத்தை மீறி கால தாமதம் செய்து வருகிறது. இதனால், நிறுத்தி வைக்கப்படும் ஒவ்வொரு வாகனத்துக்கும் அரசுக்கு சாலை வரியாக காலாண்டுக்கு ரூ.1.50 லட்சம், பேருந்துக்கான மாதத்தவணை ரூ.2 லட்சம், பணியாளா்கள் ஊதியம் உள்ளிட்டவை பேருந்து உரிமையாளா்கள் தங்கள் கைகளில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனா்.

எனவே, சட்டத்தை மீறி காவல் நிலையங்களில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க

வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா நேபாளம் பயணம்

சென்னை: வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா். இதையடுத்து, அவரது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் செயலா் பொறுப்பானது, கால்நடை, மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா். ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நா... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க