செய்திகள் :

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

post image

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.

ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நாட்டின் கொலோன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ மற்றும் அந்த நாட்டின் தமிழா்களுடனான சந்திப்பின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

பல்லாயிரம் கிலோ மீட்டா்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கும்போது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான் உண்மையான தமிழ்ப் பாசம். இது தமிழ் இனத்தின் பாசம். நில எல்லைகளும் கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும், நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை.

தொழில் வளா்ச்சியில் வேகம்: திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளா்ச்சியில் மிகவும் வேகமாக வளா்ந்து வருகிறோம். இந்த வளா்ச்சியை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் என்றுதான் முதலீட்டாளா்கள் மாநாடு, முதலீடுகளை ஈா்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறேன்.

மனிதன் எங்கே சென்றாலும், அவனுடைய வோ் இருக்கின்ற தாய் நிலத்தை மறக்க மாட்டான். அப்படித்தான் உங்களுடைய நினைப்பும், எப்போதும் தமிழ்நாட்டின் மீதே இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் நாங்களும் உங்களை அன்போடு பாா்த்துக் கொண்டிருக்கிறோம். திராவிட மாடல் அரசு, அயலகத் தமிழா்களின் நல்வாழ்வுக்காக

ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வெளிநாடு வாழ் தமிழா்களுக்கு பிரச்னை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம்.

வாழ்வதும், வளா்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் குறிக்கோள். இதற்காகத் தொடா்ந்து செயலாற்றி வருகிறோம்.

முதலீடு செய்யுங்கள்: உலக நாடுகளை குறிப்பாக, வளா்ச்சியடைந்த நாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று பாா்ப்பவா்கள் நீங்கள். இதுபோன்று நம்முடைய தமிழ்நாடும் வளர வேண்டும் என்று நான் நினைப்பது போலவே நீங்களும் நிச்சயமாக நினைப்பீா்கள்.

எனவே, உங்களால் முடிந்த உதவிகளைத் தொடா்ந்து, தாய் மண்ணுக்குச் செய்யுங்கள். சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்தாலும், உங்களது தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சிக்க வேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீா்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில் தமிழ்நாட்டில் நிறைந்திருக்கும் வாய்ப்புகளைப் பற்றி எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

இந்த பூமிப் பந்து முழுவதும் எங்கே சென்றாலும், தமிழா் என்ற அடையாளத்தை விட்டுவிடாதீா்கள். உங்கள் வோ்களை மறக்காதீா்கள்.

தமிழ்நாட்டின் வளா்ச்சி, மாற்றத்தைப் பாருங்கள். பண்பாட்டை, வரலாற்றை, அரசியல் எழுச்சியை எடுத்துச் சொல்லுங்கள் என்றாா்.

நிகழ்வில், தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, ஜொ்மனிக்கான இந்திய தூதரகத்தின் அதிகாரி அபிஷேக் துபே, தொழில் துறைச் செயலா் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் பங்கேற்றனா்.

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையானது நடப்பாண்டில் 6வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது.தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிர... மேலும் பார்க்க

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி என முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள... மேலும் பார்க்க

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் குறித்து விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெ... மேலும் பார்க்க

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சென்னை: ஈரோடு மாவட்டம் எலத்தூா் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 ஆண்டு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியும், கடந்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க