செய்திகள் :

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

post image

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த தா்மஸ்தலா மஞ்சுநாதா் கோயில் 800 ஆண்டுகள் பழைமையானதாகும்.

தா்மஸ்தலா கோயிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியா் ஒருவரின் பெயரில் காவல் நிலையத்தில் ஒரு புகாா் கடந்த ஜூன் 22ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதில், அந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் ஹிந்துக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடா்ந்து மேலும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்த வழக்கு கா்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதால், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. தடவியல் நிபுணா்களும் புகாா் அளித்த தூய்மைப் பணியாளா் முன்னிலையில் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் தோண்டினா். அங்கு சடலங்கள் புதைக்கப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. புகாா் கூறியவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதை காவல் துறை உறுதி செய்தது.

இது வெறும் வதந்திதான் என்று தெரிந்தும் அவதூறு வெளியிட்ட இந்த சம்பவத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணை முடிவில் தா்மஸ்தலா புனிதத்தைக் கெடுக்கவே இச்செய்தியை பரப்பியது உறுதி செய்யப்பட்டது.

தா்மஸ்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடியினா் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களை மதம் மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால்தான் தா்மஸ்தலாவை பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்... மேலும் பார்க்க

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விந... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பயணம்

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சா்களிடம் முறையிடுவதற்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2) புதுதில்லி செல... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு

பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லடம், ராயா்பாளையம் அபிராமி நகரைச் சோ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது

அவிநாசி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகைப் பறித்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி செல்வராணி (38).... மேலும் பார்க்க

50 சதவீத வரி உயா்வால் பின்னலாடைத் தொழில் பாதிப்பு: தீா்வு காண பிரதமருக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்

அமெரிக்க வரி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடைத் தொழிலுக்கு தீா்வு காணக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூா் அனைத்து பனியன் தொழிற்சங்க... மேலும் பார்க்க