செய்திகள் :

மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!

post image

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியா அமெரிக்காவுக்கு அதிகப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஏற்றுமதி செய்கிறது. இந்த ஒருதலைப்பட்ச வா்த்தக உறவு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா மீதான வரிகளைக் குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், இதனால், தில்லி - வாஷிங்டன் இடையிலான நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் பேசுகையில், “இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இது உக்ரைன் - ரஷியா இடையேயான போரை மேலும் தூண்டுகிறது.

சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூவரும் சந்தித்து பேசினர். இந்தக் கூட்டம் நீண்டகால கூட்டம் என நினைக்கிறேன். இது செயல்மிக்க கூட்டம் என்றும் நினைக்கிறேன்.

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு. அவர்களின் மதிப்புகள் ரஷியாவைவிட நமக்கும் சீனாவுக்கும் மிக தேவயானவை. மேலும், இவர்கள் மிகவும் மோசமான நடிகர்கள். இந்தியாவும், சீனாவும் ரஷியாவின் போர் எந்திரத்துக்கு எரிபொருள் ஊற்றி வருகின்றன.

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு வலுவான அடித்தளத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இரண்டு பெரிய நாடுகள் இதற்கு விரைவில் தீர்வு காணும்” எனத் தெரிவித்தார்.

India a bad actor: Trump aide fumes over oil buys, calls SCO meet 'performative'

இதையும் படிக்க : தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாபின் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பஞ்சாபில் பெய்த கனமழையாலும், அங்குள்ள முக்கிய... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்?

தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மாகாணங்களே முழுமையாக நாசமாகியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை காலைதான் அந்த செய்தி வெள... மேலும் பார்க்க

இந்தோனேசியா: இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியா நாட்டின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்று மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள வி... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: 900 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. 3000 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குனார், நாங்கர்ஹார் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிலநடுக்... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! உதவி கோரும் தலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவ வெளிநாடுகள் முன்வர வேண்டும் என்று தலிபா... மேலும் பார்க்க

சூடான் நிலச்சரிவில் புதைந்த கிராமம்! 1000 பேர் பலி!

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிழைத்துள்ளதாக சூடான் விடுதலை... மேலும் பார்க்க