இந்திய சில்லுகள் உலகளாவிய மாற்றத்தை உருவாக்கும்: பிரதமர் மோடி
இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சில்லுகள் (சிப்) உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் இந்திய செமிகான் 2025 தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது,
உலகளாவிய குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியாவின் வளர்ந்துவரும் பங்கை எடுத்துரைத்த அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய சில்லுகள் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் தாமதமாகத் தொடங்கினாலும், நம்மைத் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை என்று அவர் கூறினார்.