செய்திகள் :

தரங்கம்பாடி கடலில் மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டம்!

post image

தரங்கம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி படகுகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்பாட்டை தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் மீனவர்கள் தரங்கம்பாடி கடலில் இறங்கி படகுகளில் கருப்புக் கொடிகட்டி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்கள் தனித்தனி அணியாகப் பிரிந்து சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவக் குடும்பத்தினர்.

இந்த நிலையில் தரங்கம்பாடி தலைமையில் மீனவ கிராமங்கள் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை மற்றும் அதிவேக திறன் கொண்ட என்ஜின் படகுகளைப் பயன்படுத்தி வருவதை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருந்தனர்.

இந்த நிலையில் பூம்புகார் , சந்திரபாடி மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை தடைசெய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவர் கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவக் குடும்பத்தினர்.

தொடர்ந்து மீன் வளத்துறை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்துகள் தலைமையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தரங்கம்பாடி கடலில் இறங்கி விசைப்படகு, பைபர் படகுகளில் கருப்புக் கொடிகட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தரங்கம்பாடி பேருந்து நிலையம் அருகே சென்னை- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்பழழுதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் , வட்டாட்சியர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பொறையார் காவல் ஆய்வாளர் வி.ஆர். அண்ணாதுரை தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Fishermen took to the sea and protested by hoisting black flags on their boats, demanding a ban on the gillnet.

இதையும் படிக்க : சென்னையில் குடியரசுத் தலைவர்! சிட்டி யூனியன் வங்கி விழாவில் பங்கேற்பு!

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொ... மேலும் பார்க்க

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இன்று (02-09-2025) காலை 5.30 மண... மேலும் பார்க்க

ரூ. 98 கோடி ஒப்பந்த முறைகேடு: வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்பு!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல... மேலும் பார்க்க

வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் கல் வீச்சு: 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம்!

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் உயிரிழந்த வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு சகத் தொழிலாளர்கள் காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர்.இதனால், காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியட... மேலும் பார்க்க

பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கையில் கரு... மேலும் பார்க்க

கவலைப்பட வேண்டாம்; ஆசிரியர்களை அரசு கைவிடாது: அன்பில் மகேஸ்

ஆசிரியர் பணி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆசிரியர்களை அரசு கைவிடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். அரசு மற்றும் அரசு உதவி பெ... மேலும் பார்க்க