செய்திகள் :

ஜம்மு நெடுஞ்சாலையில் சிக்கித்தவிக்கும் 1000-க்கும் மேற்பட்ட பழ லாரிகள்!

post image

ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளதால், காஷ்மீர் பழ வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். கோடிக்கணக்கான ஆப்பிள் மற்றும் பேரிக்காய்களை ஏற்றிச்சென்ற 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கித்தவிக்கின்றன.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நீராதாரமான செனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முகல் சாலை திறந்து இருந்தாலும், அந்தச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. தற்போது, காஷ்மீரில் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பருவக்காலம் நிலவும் சூழலில், சாலை மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு லாரியும் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பழங்களை ஏற்றிச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

More than 1,000 trucks carrying millions of apples and pears are stranded.

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரண்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.லதேஹர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷாத் எனும் அமைப்பில் இயங்கி வந்த 9 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் தங்க... மேலும் பார்க்க

பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட விமானம் பறவை மோதியதில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 1... மேலும் பார்க்க

அபாய அளவைக் கடந்த யமுனை! வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்!

யமுனை ஆற்றின் நீா் அபாய கட்டத்தைக் கடந்துள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி எம்எல்ஏ! பழைய வழக்கில் கைது!

பஞ்சாப் வெள்ளம் குறித்து, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா, அவர் மீதான பழைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாபின் சனோர் தொகுதியின், ஆம்... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.2) இந்தியா வ... மேலும் பார்க்க