செய்திகள் :

அபாய அளவைக் கடந்த யமுனை! வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்!

post image

யமுனை ஆற்றின் நீா் அபாய கட்டத்தைக் கடந்துள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தில்லியின் 6 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் சுமாா் 15,000 போ் வசிக்கின்றனா், அதே நேரத்தில் சுமாா் 5,000 போ் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வசிக்கின்றனா்.

யமுனை ஆற்றின் நீர் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக இருக்கும் பழைய ரயில்வே பாலம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 205.81 மீட்டர் பதிவாகியுள்ளது. ஆபத்து குறியீடான 205.33 மீட்டரைக் கடந்துள்ளது.

அபாய அளவைக் கடந்த யமுனை

இதனால், தாழ்வான பகுதிகளான மயூர் விஹார் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் கரையை உடைத்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களுக்குச் செல்லுமாறு படகுகள் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 1.76 லட்சம் கனஅடி நீரும், வஜிராபாத் அணையிலிருந்து 69,210 கனஅடி மற்றும் ஓக்லா அணையிலிருந்து 73,619 கனஅடி நீரும் யமுனை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று இரவு 8 மணியளவில் ஆற்றின் நீர் ஓட்டம் 206.41 மீட்டராக உயரக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

As the Yamuna River water level has crossed the danger mark, floodwaters have entered homes located along the banks.

இதையும் படிக்க : மனித நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி!

இந்தியாவில் மீண்டும் வருகிறதா டிக்டாக்? சீன உறவு காரணமா??

இந்தியாவில் டிக்டாக் செயலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்ப... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந... மேலும் பார்க்க

மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

என் தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, எனது தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிகாரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், காணொலி வ... மேலும் பார்க்க

இந்திய சில்லுகள் உலகளாவிய மாற்றத்தை உருவாக்கும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சில்லுகள் (சிப்) உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் இந்திய செமிகான் 2025 தொடக்க விழாவில் பிரதமர் மோடி க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக ... மேலும் பார்க்க