செய்திகள் :

பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

post image

நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட விமானம் பறவை மோதியதில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 165 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் மீது பறவைகள் மோதின.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

அதன்பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பயணிகளை மாற்று விமானம் மூலம் கொல்கத்தாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

A Nagpur-Kolkata IndiGo flight returned to the airport here following a suspected bird hit after take-off on Tuesday morning, a senior airport official said.

இந்தியாவில் மீண்டும் வருகிறதா டிக்டாக்? சீன உறவு காரணமா??

இந்தியாவில் டிக்டாக் செயலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்ப... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந... மேலும் பார்க்க

மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

என் தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, எனது தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிகாரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், காணொலி வ... மேலும் பார்க்க

இந்திய சில்லுகள் உலகளாவிய மாற்றத்தை உருவாக்கும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சில்லுகள் (சிப்) உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் இந்திய செமிகான் 2025 தொடக்க விழாவில் பிரதமர் மோடி க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக ... மேலும் பார்க்க