செய்திகள் :

US: ``இந்தியா இங்கே நிறைய விற்கிறது; அமெரிக்காவால் இந்தியாவில் விற்க முடியவில்லை'' -ட்ரம்ப் காட்டம்

post image

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தக காரணமாக, இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி சில நாள்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.

இவ்வாறிருக்கும் நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.

மூவரும் அமெரிக்காவின் வரிகளால் எழும் உலகளாவிய வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் சவால்களைப் பற்றி விவாதித்தனர்.

SCO உச்சி மாநாடு
SCO உச்சி மாநாடு

இந்த நிலையில், மோடியின் இத்தகைய சந்திப்பைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தலைப்பக்கத்தில் இந்தியா குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், "அவர்கள் (இந்தியா) எங்களிடம் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறார்கள். எங்களிடம் அதிகளவில் பொருள்களை விற்கிறார்கள்.

ஆனால், நாங்கள் அவர்களிடம் குறைந்த அளவிலேயே விற்கிறோம். இதுவரையிலும் ஒருதலைபட்சமான உறவே இது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஏனெனில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் பொருள்கள் விற்க முடியாத அளவுக்கு வரிகள் இருக்கின்றன. இது ஒற்றை சார்பு பேரழிவு.

அதேசமயம், எண்ணெய் மற்றும் ராணுவ பொருள்களை ரஷ்யாவிடம் அதிகம் வாங்குகிறார்கள். எங்களிடம் குறைவாகவே வாங்குகிறார்கள்.

தற்போது, அவர்கள் தங்களின் வரிகளைக் குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால், இது தாமதமாகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும்" என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பாகிஸ்தானுடன் குடும்ப வணிகத்துக்காக இந்தியாவைத் தூக்கி எறிந்த ட்ரம்ப்' -முன்னாள் NSA குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், வழக்கறிஞருமான ஜேக் சலிவன், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடனான தனது குடும்பத்தின் வணிக நன்மைக்காக இந்தியாவுடனான உறவை தூக்கி எறிகிறார் என்று விமர்சித்துள்ளார்.ஜோ ... மேலும் பார்க்க

``அரசியலில் தொடர்பு இல்லாத என் அம்மாவை காங்கிரஸ், ஆர்.ஜே.டி அவமதித்தது ஏன்? - பிரதமர் மோடி வேதனை

ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.பீஹாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.தர்பங்காவில... மேலும் பார்க்க

TTV Dhinakaran: ஓரங்கட்டும் NDA; விஜய்க்கு சிக்னல் கொடுக்கும் டிடிவி! - தினகரனின் ப்ளான் என்ன?

ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், முதல்வருடன் சந்திப்பு, மதுரையில் மாநாடு அறிவிப்பு என பரபரப்பு கிளப்பி வந்த ஓ.பி.எஸ் இப்போது கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார்.ஓ.பி.எஸ் விட்ட இடத்திலிருந்து டிடிவி தினகரன் ... மேலும் பார்க்க

``பொருளாதார சுயநல சவால்களை தாண்டி, இந்தியா 7.8% வளர்ச்சி'' - ட்ரம்பிற்கு மோடி மறைமுகக் குட்டு

இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதற்கு முன்னர், ட்ரம்ப் இந்தியா மற்றும் ரஷ்யாவை 'இறந்த பொருளாதாரங்கள்' என்று... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன் எங்களுடன்தான் இருக்கிறார்; யாருக்கும் சந்தேகம் தேவையில்லை'' - நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணிநெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினர் நாகேந்திரன்,"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்க... மேலும் பார்க்க

``நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தம்'' – செல்வப்பெருந்தகை

நெல்லையில் காங்கிரஸ் மாநாடுநெல்லையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.பின்னர் செய்தியாளர்கள... மேலும் பார்க்க