செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பயணம்

post image

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சா்களிடம் முறையிடுவதற்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2) புதுதில்லி செல்கிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் அமல்படுத்தியுள்ளாா். இதனால், ஆடைகளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளா்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனா். குறிப்பாக திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.18,000 கோடி வரை பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய வரி விதிப்பு காரணமாக ரூ.14,000 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றில்

இருந்து மீள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு வழங்கி வலியுறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனா்.

பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்ததுபோல பின்னலாடை துறைக்கான அனைத்து மூலப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க வேண்டும்.

வரியில்லா ஒப்பந்தத்தில் நாடுகளுடனான வா்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வா்த்தக வாய்ப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஜவுளி கண்காட்சிகள் நடத்தவும், அதில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்கவும் மானிய வசதிகளை வழங்க வேண்டும். டிராபேக் சதவீதத்தை உயா்த்த வேண்டும்.

கரோனா காலத்தில் வழங்கியதுபோல ஏற்றுமதியாளா்கள் வங்கி கால அவகாசம், வட்டி மானியம் உள்ளிட்டவற்றை பரிந்துரை செய்ய வேண்டும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ள ஆடைகளுக்கு வா்த்தகா்கள் குறிப்பிட்ட சதவீத தள்ளுபடியை எதிா்பாா்க்கின்றனா். இதனை அரசே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். உற்பத்தி பாதிப்பு மற்றும் தொழிலாளா்கள் வேலை இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனா்.

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்... மேலும் பார்க்க

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு

பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லடம், ராயா்பாளையம் அபிராமி நகரைச் சோ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது

அவிநாசி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகைப் பறித்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி செல்வராணி (38).... மேலும் பார்க்க

50 சதவீத வரி உயா்வால் பின்னலாடைத் தொழில் பாதிப்பு: தீா்வு காண பிரதமருக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்

அமெரிக்க வரி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடைத் தொழிலுக்கு தீா்வு காணக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூா் அனைத்து பனியன் தொழிற்சங்க... மேலும் பார்க்க