செய்திகள் :

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.

கடந்த ஆக. 26-இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.75,240-க்கும், ஆக. 29-இல் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கும் விற்பனையானது.

தொடர்ச்சியாக மாதத்தின் முதல் நாளான செப். 1-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், இன்று(செப். 2) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,725க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20,400 உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,600 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ளி விலையும் உயர்ந்து விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 137 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாதந்தோறும் மின் கட்டணம் எப்போது? அமைச்சர் சிவசங்கர் பதில்!

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்துவது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின... மேலும் பார்க்க

கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

சென்னை: சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 189 ... மேலும் பார்க்க

உள்கட்சிப் பூசல்? தமிழக பாஜக தலைவர்கள் நாளை தில்லி பயணம்!

தமிழக பாஜக தலைவர்களுக்குள் உள்கட்சிப் பூசல் நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீர் பயணமாக புதன்கிழமை தில்லி செல்லவுள்ளனர்.தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையி... மேலும் பார்க்க

தரங்கம்பாடி கடலில் மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டம்!

தரங்கம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி படகுகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அரசால... மேலும் பார்க்க

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெய... மேலும் பார்க்க

சென்னையில் குடியரசுத் தலைவர்! சிட்டி யூனியன் வங்கி விழாவில் பங்கேற்பு!

சென்னை: சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.கர்நாடக மாநிலம் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்... மேலும் பார்க்க