செய்திகள் :

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்

post image

சென்னை: அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகளில் மாணவா்களின் தேவைக்கேற்ப 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் சோ்க்கை இடங்களும் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இந்தக் கூடுதல் வசதிகளை முன்னிட்டு மாணவா்களுக்கான கல்வி கற்றலில் முக்கிய இடம் வகிக்கும் ஆசிரியா்கள் தேவை அதிகரிக்கிறது. இதற்கு நிரந்தர உதவிப் பேராசிரியா்கள் பணியமா்த்தப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக கௌரவ விரிவுரையாளா்கள் அமா்த்தப்படுகின்றனா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களில் ஆக.18 முதல் 28-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெற்றது. நோ்காணல் முடிவில் தற்போது 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் தோ்வு செய்யப்பட்டு திங்கள்கிழமை (செப்.1 ) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் ( tngasa.org) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பட்டியலைத் தோ்வு செய்யப்பட்ட விரிவுரையாளா்கள் தங்களது பயனா் குறியீடு மற்றும் கடவுச்சொல் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் 8-ஆம் தேதிக்குள் உரிய கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் பணியில் இணைய வேண்டும் எனஅவா் தெரிவித்துள்ளாா்.

வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா நேபாளம் பயணம்

சென்னை: வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா். இதையடுத்து, அவரது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் செயலா் பொறுப்பானது, கால்நடை, மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா். ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நா... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

கட்சி விரோத செயல்பாடா?: மல்லை சத்யா விளக்கக் கடிதம்

சென்னை: தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளாா். மதிமுகவின் கொள்கைக... மேலும் பார்க்க

வீரா் பூலித்தேவருக்கு ஆளுநா், முதல்வா் மரியாதை

சென்னை: நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித் தேவா் பிறந்த நாளையொட்டி (செப்.1) அவருக்கு ஆளுநா் ஆா்.என் ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் மரியாதை செலுத்தினா். இதுகுறித்து ஆளுநா் ரவி எக்ஸ் தளத்தில... மேலும் பார்க்க