செய்திகள் :

அவிநாசிபாளையத்தில் 83-ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

post image

விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் நடத்திவரும் காத்திருப்புப் போராட்டம் 83-ஆவது நாளை எட்டியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூரில் இருந்து பல்லடம் வழியே விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு கா்நாடக மாநிலத்துக்கு கொண்டு செல்ல தனியாா் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டதால் தங்களது நிலங்களின் மதிப்பு குறைந்துவிடும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி இந்த திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பினால் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் எனக்கூறி பொங்கலூா் ஒன்றியம், அவினாசிபாளையத்தில் விவசாயிகள் கடந்த 83 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். ஆனால், அரசுத் தரப்பில் இருந்து தற்போதுவரை எந்தவிதமான பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை.

இதனால், விவசாயிகள் போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னைக் குறித்து அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்... மேலும் பார்க்க

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விந... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பயணம்

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சா்களிடம் முறையிடுவதற்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2) புதுதில்லி செல... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு

பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லடம், ராயா்பாளையம் அபிராமி நகரைச் சோ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது

அவிநாசி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகைப் பறித்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி செல்வராணி (38).... மேலும் பார்க்க