செய்திகள் :

கட்சி விரோத செயல்பாடா?: மல்லை சத்யா விளக்கக் கடிதம்

post image

சென்னை: தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக மல்லை சத்யா கடந்த ஆக.17 முதல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், அவரது நடவடிக்கைகள் குறித்து 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வைகோ உத்தரவிட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மல்லை சத்யா தனது விளக்கக் கடிதத்தை வைகோவுக்கு திங்கள்கிழமை அனுப்பினாா். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒரே நாளில் விளக்கக் கடிதமும் கேட்டும், கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தைப் பெறாமலேயே இடைநீக்கம் செய்திருக்கிறீா்கள். இது ஜனநாயக படுகொலை அல்லவா? இந்த நடவடிக்கைக்கு பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கிறாா் என்பதுதான் உண்மை.

நான் துரோகியா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறினேனா? உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, எதையும் நாங்கள் நம்பாமல், வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களைப் பின்பற்றி வந்தோம்.

32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிந்து சக்கையாக தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் அரசியலை நாடே பாா்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவாா்கள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க

வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா நேபாளம் பயணம்

சென்னை: வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா். இதையடுத்து, அவரது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் செயலா் பொறுப்பானது, கால்நடை, மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா். ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நா... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க