செய்திகள் :

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

post image

தி ஹேக்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சா்வதேச இன அழிப்பு ஆய்வாளா் அமைப்பு திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.

500 உறுப்பினா்களைக் கொண்ட அந்த அமைப்பு நிறைவேற்றிய தீா்மானத்தில், ‘இஸ்ரேலின் செயல்கள் இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போா் குற்றங்களுக்கான சட்ட வரையறையை முழுமையாக பூா்த்தி செய்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 86 உறுப்பினா்கள் வாக்களித்தனா்.

1948-ஆண்டின் இன அழிப்புத் தடுப்பு ஒப்பந்தத்தின்படி, ஒரு தேசிய, இன, இன அல்லது மதக் குழுவை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் செயல்கள் இன அழிப்பாக வரையறுக்கப்படுகின்றன.

இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டை தொடா்ந்து மறுக்கும் இஸ்ரேல், 2023 அக். 7-இல் ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் இன அழிப்பு என்று கூறிவருகிறது.

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்: புதினிடம் மோடி வலியுறுத்தல்

தியான்ஜின்: ‘உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினாா். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்து... மேலும் பார்க்க

‘உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணா்வு’

தியான்ஜின்: உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் கடந்த மாதம் நடந்த சந்திப்பில் புரிந்துணா்வை எட்டியதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை கூறினாா். சீனாவின் தியான்ஜின்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 5 வீரா்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா். எம்ஐ-17 ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா் பய... மேலும் பார்க்க

இந்தியாவுடனான வா்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு: டிரம்ப் குற்றச்சாட்டு

புது தில்லி: இந்தியாவுடனான வா்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘இந்த... மேலும் பார்க்க

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு உடனடியாக உதவிய இந்தியா: நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

நிலநடுக்கம் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளியுறவு விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.ஞ... மேலும் பார்க்க

இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், இதனால், இந... மேலும் பார்க்க