செய்திகள் :

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு உடனடியாக உதவிய இந்தியா: நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

post image

நிலநடுக்கம் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளியுறவு விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் இடிபாடுகளும், சேதமடைந்த கட்டடங்களுமாகக் காட்சியளிக்கின்றன.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 800 பேர் பலியானதாகவும் 2500 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கனுக்கான நிவாரண உதவி குறித்து அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மாவ்லாவி ஆமிர் கான் முட்டாக்கியுடன் இன்று(செப். 1) பேசி அங்குள்ள கள நிலவரத்தை கேட்டறிந்தேன். அப்போது, நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்காக ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தேன்.

1,000 குடும்பங்கள் தங்க ஏதுவாக டெண்ட் கொட்டகைகள் அமைக்க தேவையான பொருல்கள் இந்தியா தரப்பிலிருந்து காபூலுக்கு சென்று சேர்க்கப்பட்டுள்ளன.

15 டன் உணவுப் பொருள்கள் இந்திய தூதரக நடவடிக்கையால் காபூலிலிருந்து குனார் பகுதிக்கு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. நாளைமுதல் இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்களும் ஆப்கன் சென்றடையும்.

பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும், இந்த இக்கட்டான தருணத்தில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா துணை நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.

India has delivered 1000 family tents today in Kabul. 15 tonnes of food material is also being immediately moved by Indian Mission from Kabul to Kunar.

இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், இதனால், இந... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றுகிறதா அமெரிக்கா?

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றி சுற்றுலா நகரமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ்... மேலும் பார்க்க

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

காபூல்: ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் இடிபாடுகளும், சேதமடைந்த கட்டடங்களுமாகக் காட்சியளிக்கின்றன.கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 80... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர்.இந்த விபத்தில், ஒரு விமானம் தீப்... மேலும் பார்க்க

இந்தியா - ரஷியா இடையேயான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது! புதின்

இந்தியா - ரஷியா இடையேயான உறவு எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்று இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார். சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான சவால்: எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி!

பயங்கரவாதம் என்பது, ஒட்டுமொத்த மனிதகுலுத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்து... மேலும் பார்க்க