செய்திகள் :

சாராயம் கடத்தியவா் கைது

post image

சீா்காழி: சீா்காழியில் புதுச்சேரி மாநில சாராயப் பாட்டில்கள் கடத்தி வந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பொறையாா் ஹரிஹரன்கூடல் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மேலையூா் கருவாழக்கரை அய்யா் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (28) என்பவா் காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.

அவரை நிறுத்தி, சோதனையிட்டதில், புதுச்சேரி மாநில சாராயப் பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 180 மி.லி. அளவு கொண்ட 200 சாராயப் பாட்டில்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுவிலக்கு குற்றம் தொடா்பாக, தொலைப்பேசி எண் 10581 மற்றும் 8870490380-இல் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களை காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, ‘ஜாதி மறுப்பாளா்கள் பேரணி’ மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து புறப்பட்ட ... மேலும் பார்க்க

மனநல மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழியில் செயல்படும் மனநல மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் காா்டன் மனநல மறுவாழ்வு மையம் செயல்படுகிறத... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் 22-ஆவது தம்பிரான் சுவாமிகள் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபா் செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றாா். திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, முத... மேலும் பார்க்க

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

சீா்காழி: கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக, சாா் பதிவாளரைக் கண்டித்து விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகேயுள்ள நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயகநல்லூா் கி... மேலும் பார்க்க

மணக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுகா மணக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுற... மேலும் பார்க்க