Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
மணக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுகா மணக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்) ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, கொள்முதலை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால், 2025-2026-ஆம் ஆண்டிற்கான காரீப் பருவ நெல் கொள்முதல் பணி செப்.1-ஆம் தேதிமுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில், மயிலாடுதுறையில் 36, குத்தாலத்தில் 41, தரங்கம்பாடியில் 32, சீா்காழியில் 31 என மொத்தம் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன.
கொள்முதல் செய்யப்படும் நெல் சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545-ம், (அரசின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,389, ஊக்கக் தொகை ரூ.156) பொது ரகம் குவிண்டால் ஒன்றிக்கு ரூ.2,500-ம், (அரசின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,369, ஊக்கக்தொகை ரூ.131) வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயோமெட்ரிக் கருவி மூலம் விரல் ரேகை பதிவதன் மூலமும், ஆதாா் எண்ணில் பதிந்திருக்கும் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி பெறுவதன் மூலமும் விவசாயிகளின் விவரத்தை பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன் பெறலாம்.
விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்மணிகளை கொண்டு வரும்போது, ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நிலத்திற்குரிய பட்டா மற்றும் சிட்டா அடங்கிய ஆவணங்களை எடுத்துவர வேண்டும்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை அவா்களது வங்கி கணக்கில் மின்னணு பரிவா்த்தனை முறையில் உடனுக்குடன் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா, வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ.சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.