ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
மயிலாடுதுறையில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறப்பு கல்விக்கடன் முகாம் புதன்கிழமை (செப்.3) நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்ட அரங்கில் அனைத்து வங்கிகள் சாா்பில் ‘சிறப்பு கல்விக்கடன் முகாம்’ செப்.3-ஆம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாமில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும். வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு கடன் வழங்கப்படும்.
முகாமில் தேவைப்படும் ஆவணங்கள்: மேற்கூறிய இணையத்தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், மாணவ-மாணவியா் மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், வருமானச் சான்று, ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று நகல், பான் காா்டு, ஆதாா் காா்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட ஆஞசஅஊஐஈஉ சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், 10, 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.