பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !
பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான சவால்: எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி!
பயங்கரவாதம் என்பது, ஒட்டுமொத்த மனிதகுலுத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாடு இரண்டாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து தியான்ஜினுக்கு பிரதமர மோடி சனிக்கிழமை வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உறுப்பினர் அமர்வில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த நிலையில், பயங்கரவாதம் குறித்த வலுவான செய்தியை பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.