செய்திகள் :

நெல்லை: தாயை அடித்துக் கொன்ற மகன்; திருமணம் மீறிய உறவால் நிகழ்ந்த கொடூரம்

post image

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் பூல்பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ரெஜினா, தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ரெஜினாவிற்கும் பக்கத்து வீட்டு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

மூலைககரைப்பட்டி காவல் நிலையம்
மூலைககரைப்பட்டி காவல் நிலையம்

நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதையறிந்த ரெஜினாவின் மூத்த மகனான கொம்பையா தனது தாயையும் அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தகாத உறவைக் கைவிடவில்லை. இரண்டு மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் ரெஜினா அந்த வாலிபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இதனால் ரெஜினாவிற்கும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று இரவில் ரெஜினாவும் பக்கத்து வீட்டு வாலிபரும் நெருக்கமாக இருந்துள்ளனர். திடீரென கண் விழித்த கொம்பையா, இதனைப் பார்த்து ஆத்திரத்தில் இருவரையும் தாக்கியுள்ளார். அந்த வாலிபர் தப்பி ஓடவே இரும்புக் கம்பியால் தாய் ரெஜினாவைத் தாக்கியுள்ளார்.

மூலைக்கரைப்பட்டி காவல் நிலையம்
மூலைக்கரைப்பட்டி காவல் நிலையம்

பின்னர் ரெஜினாவின் கழுத்தைப் பிடித்து நெரிக்கவே அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பின்னர் கொம்பையா தாய் ரெஜினாவின் உடலை வீட்டின் அருகில் உள்ள கோயில் அருகில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.

இன்று காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூலக்கரைப்பட்டி போலீஸாருக்குத் தகவல் கூறியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொம்பையாவைத் தேடி வருகின்றனர்.     

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?

சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: "ஃபுல் பாட்டில ராவா குடிச்சு ஸ்டெடியா நிக்கணும்" - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.அவர் என்ன ஆனார் என்று த... மேலும் பார்க்க

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந... மேலும் பார்க்க

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் ட... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் கொள்ளையடித்த 3 பேர்; 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

விருதுநகர் வ.உசி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி (48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச்... மேலும் பார்க்க