செய்திகள் :

கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?

post image

சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோதனை நடத்தினார்கள்.

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்

அப்போது முதலாம் குளிர்சாதனப் பெட்டியில், ஒரு கைப்பை இருந்துள்ளது. அதைத் திறந்து பார்த்தபோது செயின், நெக்லஸ், வளையல், கம்மல் உள்பட 50 சவரன் நகை இருந்துள்ளது.

மேலும் ரூ.11,000 ரொக்கம், ரூ.25,000 மதிப்பிலான செல்போன் ஆகியவையும் இருந்துள்ளது. ரயில்வே காவல்துறையினர் அதை மீட்டு வைத்திருந்தனர். அந்த செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

ரயில்
ரயில்

காவல்துறையினர் எடுத்துப் பேசியபோது எதிரில் பேசியவர், “என் பெயர் ரவிக்குமார். நான் மனைவியுடன் சென்னையில் இருந்து கோவை வந்தேன். அப்போது நகை, பணம், செல்போன் உள்ளிட்டவை வைத்திருந்த பையை மறந்து வைத்து வீட்டுக்கு வந்துவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.

பிறகு அவர்கள் காவல்துறையினர் அறிவுறுத்தல்படி கோவை ரயில் நிலையத்தில் உள்ள, ரயில்வே பாதுகாப்பு காவல்துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு காவல்துறையினர் அவர்களின் பையைத் திறந்து காட்டியுள்ளனர். அதில் அனைத்து உடைமைகளும் சரியாக இருந்துள்ளன.

நகை ஒப்படைப்பு
நகை ஒப்படைப்பு

இதையடுத்து அவை ரவிக்குமார் மற்றும் அவர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகை, பணம் தொலைந்துவிட்டதோ என்று அதிர்ச்சியடைந்தவர்கள், அது மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கன்னியாகுமரி: "ஃபுல் பாட்டில ராவா குடிச்சு ஸ்டெடியா நிக்கணும்" - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.அவர் என்ன ஆனார் என்று த... மேலும் பார்க்க

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந... மேலும் பார்க்க

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் ட... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் கொள்ளையடித்த 3 பேர்; 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

விருதுநகர் வ.உசி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி (48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச்... மேலும் பார்க்க

`திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் வா...' - மகளின் காதலனை தனி அறையில் அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பிம்ப்ரியில் இருக்கும் சங்க்வி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ரமேஸ்வர்(26). இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண்ணின் வீட்டாரிடம் பே... மேலும் பார்க்க