செய்திகள் :

`திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் வா...' - மகளின் காதலனை தனி அறையில் அடித்துக் கொன்ற தந்தை!

post image

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பிம்ப்ரியில் இருக்கும் சங்க்வி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ரமேஸ்வர்(26). இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண்ணின் வீட்டாரிடம் பேசியபோது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

ரமேஸ்வர் மீது பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சில கிரிமினல் வழக்குகளும் ரமேஸ்வர் மீது இருப்பதை சுட்டிக்காட்டி அவர்களது திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கைதானவர்கள்

ஆனால் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் காதலர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரமேஸ்வரை பெண்ணின் தந்தை தனது வீட்டிற்கு அழைத்தார். ரமேஸ்வர் தனது பெற்றோருடன் சென்றார். அங்கு இரு குடும்பத்தினரும் பேசிக்கொண்டிருக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண்ணின் தந்தையும் உறவினர்களும் ரமேஸ்வரை தனி அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் ரமேஸ்வர் படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் ரமேஸ்வர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இது குறித்து வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை உட்பட 9 பேர் கைது செய்து இருப்பதாகவும், மேலும் இரண்டு பேரை தேடி வருவதாகவும் இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர கோலி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.அவர் என்ன ஆனார் என்று த... மேலும் பார்க்க

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந... மேலும் பார்க்க

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் ட... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் கொள்ளையடித்த 3 பேர்; 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

விருதுநகர் வ.உசி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி (48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச்... மேலும் பார்க்க

``ரூ.232 கோடி மோசடி'' - இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ராகுல் விஜய் கைது; CBI நடவடிக்கை

மத்திய புலனாய்வு காவலர்கள் (CBI), ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.AAI சார்பில் ராகுல் விஜய் என்ற அதிகாரிக்கு எதிராக புகார் ... மேலும் பார்க்க

Microsoft அலுவலகத்திலேயே மரணமடைந்த இந்திய ஊழியர் – விலகாத மர்மம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உயிரிழந்த நிலையில் இந்திய ஊழியர் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.பிரதிக்... மேலும் பார்க்க