செய்திகள் :

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

post image

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இன்று காலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் ஒரே காரில் புறப்பட்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் அரங்குக்குச் சென்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது மோடி பேசியதாவது:

”புதினைச் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். பல விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பல உயர்நிலை சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உங்களை வரவேற்க 140 கோடி இந்தியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளார்கள்.

மிகவும் கடினமான சூழ்நிலைகளில்கூட இந்தியாவும் ரஷ்யாவும் எப்போதும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளன. இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கும் நமது நெருங்கிய உறவு முக்கியமானது.

உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். அமைதிக்கான சமீபத்திய முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக முன்னேறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்த அமைதியை நிலைநாட்ட ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இது முழு மனிதகுலத்தின் விருப்பம்.” எனத் தெரிவித்தார்.

Prime Minister Modi said in a bilateral meeting with the Russian President that India and Russia have stood shoulder to shoulder in the most difficult circumstances.

இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதலுக்கு எஸ்சிஓ தலைவர்கள் கண்டன தீர்மானம்! பாகிஸ்தான் பிரதமரும்...

திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிகாரில் பேசியுள்ளார். பி... மேலும் பார்க்க

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்ட... மேலும் பார்க்க

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் ம... மேலும் பார்க்க

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்... மேலும் பார்க்க

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க