TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்;...
ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா
ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்களில் ஏற்பட்ட சேதங்களை அவர் ஆய்வு செய்தார். ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, இன்று பிற்பகலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமித் ஷா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக வெள்ள நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ஜம்மு வந்தடைந்தார்.
மூன்று மாதங்களில் உள்துறை அமைச்சர் ஜம்முவுக்கு வருகை தருவது இது இரண்டாவது முறையாகும். ஆகஸ்ட் 14 முதல் கிஷ்த்வார், கதுவா, ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் மேக வெடிப்புகள், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளனர். ஆகஸ்ட் 26-27 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் ஜம்மு மற்றும் பிற சமவெளிகளின் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 26ஆம் தேதி மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலியாகினர்.