செய்திகள் :

விருதுநகர்: `ஊதிய உயர்வு; பணிச்சுமை'- அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைப் புறக்கணிப்பு

post image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கையுடன் செயல்படும் உள் நோயாளிகள் பிரிவில் ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த மருத்துவமனையில் இதற்கு முன் உள்ள ஒப்பந்தத்தின் படி 378 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். ஆனால் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதனால் 132 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

ஒப்பந்த ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு

இதன் பின்பு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ச்சியான பணிச்சுமையினால் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலையை விட்டு வெளியேறி வருகின்றனர். தற்போது 118 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்நிலையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க மூன்று மாதங்களாக தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதால் பணிச்சுமை அதிகமாகி ஊழியர்கள் பலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஒப்பந்த ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு

கூடுதல் பணியாளர்கள் நியமிக்கவும், ஊதிய உயர்வு வழங்க கோரியும் தொழிலாளர்கள் இன்று வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அன்புவேல் ஆகியோர் ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ம... மேலும் பார்க்க

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?

சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட த... மேலும் பார்க்க

TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள... மேலும் பார்க்க