செய்திகள் :

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

post image

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்கான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் 6,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

ஜெர்மனியில் ஸ்டாலின்
ஜெர்மனியில் ஸ்டாலின்

இதுகுறித்து ஜெர்மனியில் பேசியிருக்கும் ஸ்டாலின், "ஜெர்மனி உடனான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.

ஜெர்மனியில் ஸ்டாலின்
ஜெர்மனியில் ஸ்டாலின்

நவீன உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பத்தில் ஜெர்மனி வலிமையாக உள்ளது. Made in Tamilnadu என்பது தரமும் திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி உள்ளது. ஜெர்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒன்றிணைத்தால் புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்க முடியும். இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?

சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட த... மேலும் பார்க்க

TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள... மேலும் பார்க்க

`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வாழ வந்தான் கண்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராகுடி ஆற்றுப் பாதையில் 12 ஆழ்துளை கிணறு என ... மேலும் பார்க்க

விருதுநகர்: `ஊதிய உயர்வு; பணிச்சுமை'- அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைப் புறக்கணிப்பு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கையுடன் செயல்படும் உள் நோயாளிகள் பிரிவில் ஆயிரம் பேர் சிகிச... மேலும் பார்க்க