செய்திகள் :

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

post image

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில், ஒரு விமானம் தீப்பற்றி எரிந்தது, மற்றொரு விமானம் அடையாளம் தெரியாத அளவுக்கு உருகுலைந்து போனது.

இது குறித்து அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்திருப்பதாவது, செஸ்னு 172 மற்றும் இஏ300 ரக விமானங்கள், கொலரடோ விமான நிலையத்தை நெருங்கி வந்த போது, எதிர்பாராத விதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் ஒரு விமானத்தில் தீப்பிடித்து எரிந்ததாகவும், மற்றொரு விமானம் கடுமையாக சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விமான விபத்து நேரிட்ட இடத்தில் இருந்த மக்கள் விரைந்து வந்து மீட்கப் பணியை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளதாக மோர்கான் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய விமானங்களில் இருந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

காபூல்: ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் இடிபாடுகளும், சேதமடைந்த கட்டடங்களுமாகக் காட்சியளிக்கின்றன.கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 80... மேலும் பார்க்க

இந்தியா - ரஷியா இடையேயான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது! புதின்

இந்தியா - ரஷியா இடையேயான உறவு எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்று இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார். சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான சவால்: எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி!

பயங்கரவாதம் என்பது, ஒட்டுமொத்த மனிதகுலுத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்து... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 400க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.முதலில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியிருந்ததாகவும், ... மேலும் பார்க்க

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது சின்வாா் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்தை ஹமாஸ் சனிக்கிழமை உறுதி செய்தது.2023, அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்கு... மேலும் பார்க்க

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா். அந்த வகையில் இந்தியா மீது 25 சதவீத பதிலடி வர... மேலும் பார்க்க