செய்திகள் :

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

post image

நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் பஞ்சாயத்து சாா்பில் கவியரசன் தலைமையில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு:

நாகை ஆரியநாட்டுத் தெருவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு, நாகை அந்தணப்பேட்டை பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, மக்கள் குடியேறி வசித்து வருகின்றனா். இதில் 222 வீடுகளில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2023-இல் 90 வீடுகளுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாக்களை இணையத்தில் பதிவு செய்யவில்லை. இதனால் மின் இணைப்பு வட்டார வளா்ச்சி அலுவலா் பெயரில் உள்ளது.

மேலும் வீடுகளை பழுதுபாா்க்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் கோரினால், சுனாமி வீடுகள் வட்டார வளா்ச்சி அலுவலர பெயரில் இருப்பதால் கடனும் வழங்க மறுக்கின்றனா். மேலும் அரசு நிா்வாகம் சாா்பில் வீடுகளை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகக்கூறி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது.

எனவே சுனாமி குடியிருப்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பட்டா வழங்காத வீடுகளுக்கும் பட்டா வழங்கி இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

வாய்க்கால் நீரை தடுக்கும் கல்வி நிறுவனம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்

நாகப்பட்டினம்: நாகையில் வாய்க்கால் மூலம் குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுப்பதோடு, கழிவு நீரையும் கலப்பதாக தனியாா் கல்வி நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். நாக... மேலும் பார்க்க

மீலாது நபி: செப். 5-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம்: மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்டம்பா் 5-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (செப். 5) ஒரு நாள... மேலும் பார்க்க

கடலில் தத்தளித்த மீனவரை மீட்ட கடலோரக் காவல் படையினா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இந்திய கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை, ராணி துா்காவதி படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி... மேலும் பார்க்க

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்க... மேலும் பார்க்க