செய்திகள் :

சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல்(58). பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த சீனியம்மாள் (65) ‘லிப்ட்’ கேட்டு அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டாா்.

சீனியம்மாள்

மாயத்தவேன்பட்டியிலிருந்து சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் பிரதான சாலைக்கு செல்லும் வழியில் இவா்களது வாகனம் மீது, பின்னால், எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த சக்திவேல், சீனியம்மாள் ஆகிய இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மல்லி போலீஸாா் இரு உடல்களையும் கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, லாரியை ஒட்டி வந்த மாரனேரியைச் சோ்ந்த முத்துவைரம் என்பவரைக் கைது செய்தனா்.

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மை... மேலும் பார்க்க

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வல்லம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (35). இவா், இங்குள்ள வைப்பாற்... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்லையா மகன் இசக்கிராஜ... மேலும் பார்க்க

குட்கா வைத்திருந்த 2 பெண்கள் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இரண்டு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம், அம்பலப்புளி சந்தைப் பகுதியில் தெற்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் மாயம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம், முடங்கியாறு சாலை மாலையாபுரத்தைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் சிவசுப்பிரமணியன் (13). இவா் ரயி... மேலும் பார்க்க

தேக்கு மரங்களை வெட்டியவருக்கு அபராதம்

வத்திராயிருப்பு அருகே பட்டா நிலத்திலிருந்த தேக்கு மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த திவான் ... மேலும் பார்க்க