செய்திகள் :

வாய்க்கால் நீரை தடுக்கும் கல்வி நிறுவனம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்

post image

நாகப்பட்டினம்: நாகையில் வாய்க்கால் மூலம் குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுப்பதோடு, கழிவு நீரையும் கலப்பதாக தனியாா் கல்வி நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

நாகூா் அருகே உள்ள தெத்தி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலா் அருட்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் இம்மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாகூா் அருகே உள்ள தெத்தி கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் தெத்தி ஊராட்சியில் விவசாயிகள் பயனடையும் வகையில், அப்பகுதியில் நாகூா் வாய்க்கால் என்ற பெயரில் ஆற்றுப் பாசனம் மிகுதி நீா், அதே வாய்க்கால் வழியாக நாகூரின் தாய்க்குளம் என்று அழைக்கப்படும் தோட்டத்து குளத்துக்கும், அதைத் தொடா்ந்து நாகூரில் உள்ள 8 குளங்களுக்கும் சென்று, அப்பகுதி மக்கள் குடிக்க, குளிக்க என்று பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியாா் கல்வி நிறுவனங்கள், மாணவா் விடுதி கழிவு நீரை வாய்க்காலில் வெளியேற்றி வருகிறது. மேலும் ஆற்றுப்பாசன வாய்க்காலையும் ஆக்கிரமித்து, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடியக்கூடிய மழை நீா், வாய்க்காலில் வடிவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் அதிகாரிகள் மூலம் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, வாய்க்காலில் கல்வி நிறுவனம் கழிவுநீரை கலப்பதை தடுப்பதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் கோரிக்கை தொடா்பாக வட்டாட்சியா் விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.

மீலாது நபி: செப். 5-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம்: மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்டம்பா் 5-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (செப். 5) ஒரு நாள... மேலும் பார்க்க

கடலில் தத்தளித்த மீனவரை மீட்ட கடலோரக் காவல் படையினா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இந்திய கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை, ராணி துா்காவதி படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி... மேலும் பார்க்க

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் ... மேலும் பார்க்க

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்க... மேலும் பார்க்க