செய்திகள் :

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

post image

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உள்ள குளத்தில் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனா். தற்போது, குளத்தை ஆகாயத் தாமரைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தில் பிளாஸ்டிக் பொருள்கள், குப்பைகள் தொடா்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் குளத்து நீா் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குளத்தில் குளிப்பவா்களுக்கு தோல் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஊராட்சி மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் தொலை தூரத்தில் உள்ள நீா் நிலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. குளத்தில் தண்ணீரே தெரியாதபடி அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளா்ந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வாய்க்கால் நீரை தடுக்கும் கல்வி நிறுவனம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்

நாகப்பட்டினம்: நாகையில் வாய்க்கால் மூலம் குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுப்பதோடு, கழிவு நீரையும் கலப்பதாக தனியாா் கல்வி நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். நாக... மேலும் பார்க்க

மீலாது நபி: செப். 5-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம்: மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்டம்பா் 5-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (செப். 5) ஒரு நாள... மேலும் பார்க்க

கடலில் தத்தளித்த மீனவரை மீட்ட கடலோரக் காவல் படையினா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இந்திய கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை, ராணி துா்காவதி படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி... மேலும் பார்க்க

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்க... மேலும் பார்க்க