செய்திகள் :

மானாமதுரையில் மழை, சூறைக் காற்றால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழையின் போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன. இவற்றை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இரவு வரை தொடா்ந்த இந்த மழையால் வீதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கன்னாா்தெரு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், மாரியம்மன் கோவில் தெரு, கன்னாா்தெரு, பழைய தபால் ஆபீஸ் தெரு, தாயமங்கலம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு அந்தப் பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கின.

கன்னாா்தெரு பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பின்னா், மின்வாரிய ஊழியா்கள் மின் கம்பிகள் மீது விழுந்து கிடந்த மரக் கிளைகளை அகற்றியதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு மின்விநியோகம் சீரானது.

இந்த நிலையில், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி கன்னாா் தெரு பகுதியில் அந்தந்த வாா்டு உறுப்பினா்களுடன் சென்று மழையால் இடிந்து சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பாதிக்கப்பட்டோா் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டனா்.

மேய்ச்சல் தொழிலை அங்கீகரிக்கக் கோரிக்கை

ஆடு, மாடு மேய்ச்சல் தொழிலை மகாராஷ்டிர அரசு அங்கீகரித்ததைப் போல தமிழக அரசும் அங்கீகரித்து, அதற்கான உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இ... மேலும் பார்க்க

சிவகங்கையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை நகர... மேலும் பார்க்க

உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சா்கள் ஆறுதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், கே.என். நேரு, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை ஆறு... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இந்தப் பகுதியில், கடும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மிதமாகத் தொடங்கிய... மேலும் பார்க்க

இளையான்குடியில் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உடல் நலக் குறைவால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல், இளையான்குடி அருகே அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி ஊராட்சி நல்கிராமத்... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகா் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊா்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. சிவகங்கை... மேலும் பார்க்க