செய்திகள் :

"போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" - ஜெர்மனி சென்ற ஸ்டாலின் ட்வீட்டும், அண்ணாமலையின் விமர்சனமும்!

post image

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், "பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.

ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு.

அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.

சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த 'Cologne Library Visit' அமைந்தது" என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகம் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டதாகப் பதிவிட்டிருக்கும் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு அதை மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலினை வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில், "ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.

சூரியன் திரைப்படத்தில், அண்ணன் கவுண்டமணி அவர்களின், "போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது.

முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல.

முதலமைச்சர் ஸ்டாலின், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழகத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...'- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜ... மேலும் பார்க்க

"அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது என்றும், அது தொடர்பான அணுகுண்டை வீசப்போகிறேன் என்றும் முன்பு தெரிவி... மேலும் பார்க்க

TNPSC: "அய்யா வைகுண்டர் பற்றிய கேள்வியே தவறானது; இதயத்தை நொறுக்கும் செயல்" - அய்யா வழியினர் வேதனை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதில், பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றில் சரியானவற்றை தேர்வுசெய்க என கேட்கப்பட்ட கேள்... மேலும் பார்க்க

டீ, காபி விலை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வரை - செப்டம்பரில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று முதல் (செப்டம்பர், 2025) இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு சில நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.1. வருமான வரிக் கணக்குத் தாக்கல்: வருகிற 15-ம் தேதியோடு, வருமான வரிக் கணக்கு... மேலும் பார்க்க

7.8% வளர்ந்த இந்தியாவின் GDP; இது தொடருமா? - இப்போதாவது மத்திய அரசு GST-ஐ குறைக்கிறதே! | Explained

கடந்த வெள்ளிக்கிழமை தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2025-26 நிதியாண்டில், முதல் காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.8 சதவிகிதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

"விஜய்யுடன் கூட்டணியா... எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; அதிமுக ஒன்றிணைய வேண்டும்" - ஓ.பி.எஸ்

'அதிமுக'வில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கிடையேயான அதிகாரப்போட்டி முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகல... மேலும் பார்க்க