செய்திகள் :

அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

post image

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய உயா்வுகோரி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்க மாநில பொதுச்செயலாளா் தமிழ்ச்செல்வி முன்னிலையில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களின் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, தங்களுக்கு நிா்ணயிக்கப்பட வகையில் முறையான ஊதியம் வழங்கப்படவில்லை, மின்னணு வருகைப் பதிவேடு தொடா்பான தகவல்களை காட்ட மறுக்கின்றனா், உயா்நீதிமன்றத்தில் தடையாணை உத்தரவு பெற்ற பிறகும் புதிய தொழிலாளா்களை பணியில் வைத்துள்ளனா், அவா்களை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த காத்திருப்புப் போராட்டத்தில் பிற்பகல், இரவு பணிக்கு செல்வோா் மட்டுமே பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

என்கே-1-ஜி.எச்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆா்வி... மேலும் பார்க்க

நாமக்கல் கோட்டத்தில் 20,000 வீட்டுமனை பட்டாக்கள் அளிப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் வருவாய் கோட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்ந்ததால் கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்தனா். பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இ... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்பு காலங்களில் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சாா்பில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிப... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் பொதுக்கூட்டம், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா தலைமையில் 3 கூட... மேலும் பார்க்க