செய்திகள் :

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடியாக சரிவு

post image

புது தில்லி: கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஜூலையில் வசூலான ரூ.1.96 லட்சம் கோடியைவிட குறைவாகும்.

இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,86,315 கோடி. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாயான ரூ.1,74,962 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.5% அதிகம். ஆனால் நிகழாண்டு ஜூலை மாதம் வசூலான ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

கடந்த ஆகஸ்டில் மொத்த உள்நாட்டு வருவாய் ரூ.1.37 லட்சம் கோடியாக 9.6 சதவீதம் அதிகரித்தது. இறக்குமதி மூலம் பெறப்படும் வரி 1.2 சதவீதம் சரிந்து ரூ.49,354 கோடி வசூலானது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி ரீஃபண்ட் ரூ.19,359 கோடியாக 20 சதவீதம் சரிந்தது.

இந்த ஆண்டு ஆகஸ்டில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 10.7 சதவீதம் அதிகம்.

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு! பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி கண்டனம்

‘பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தாா். மேலும், ‘பயங்கரவாதம் என்பது தனி ஒரு நாட்டின் பாதுகாப்புக்... மேலும் பார்க்க

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்ட... மேலும் பார்க்க

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிகாா் மாநிலம் ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த ... மேலும் பார்க்க

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்... மேலும் பார்க்க