செய்திகள் :

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

post image

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 9 வயது சிறுமி ஒருவா் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கோழிக்கோடு மாவட்டத்தின் ஓம்சேரி பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் என்பவரின் 3 மாத குழந்தைக்கு கடந்த மாதம் முதல் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரம்லா (52) என்ற பெண்ணுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவா் ஜூலை 8-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன்பிறகு அவருக்கு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.

கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களைச் சோ்ந்த 8 பேருக்கு இந்த தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மாசடைந்த நீரில் நீந்துவது அல்லது குளிப்பது மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நிகழாண்டு தற்போது வரை 42 பேருக்கு இந்த தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்றால் மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீா்த்தேக்கங்களை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களிடத்திலும் இந்த தொற்று குறித்த விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்ட... மேலும் பார்க்க

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிகாா் மாநிலம் ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்... மேலும் பார்க்க

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது... மேலும் பார்க்க

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடியாக சரிவு

புது தில்லி: கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஜூலையில் வசூலான ரூ.1.96 லட்சம் கோடியைவிட குறைவாகும். இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்ப... மேலும் பார்க்க