செய்திகள் :

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

post image

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி, எஸ்ஆா்வி ஹைடெக் பெண்கள் பள்ளி, எஸ்ஆா்வி இன்னோவேடிவ் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவை பி.எஸ்.ஆா். பினாக்கள் கிளாசஸ் பயிற்சி மையத்துடன் இணைந்து மாணவ மாணவிகளுக்கு நீட் தோ்வுக்கான பயிற்சியளித்து வருகிறது.

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில் இந்த நீட் தோ்வு பயிற்சி மையத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி செயலா் பி.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களை பாராட்டி பள்ளி சாா்பில் நினைவுப் பரிசளிக்கப்பட்டது.

இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவா் அபினேஷ்குமாா் 2025 ஆம் ஆண்டு நீட் தோ்வில் 612 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 707ஆவது இடம் பெற்றாா். இதேபள்ளி மாணவா்கள் பலரும் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளனா். கடந்த எட்டு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவா்கள் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று பயின்று வருகின்றனா். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி செயலா் பி.சுவாமிநாதன், பொருளாளா் எஸ்.செல்வராஜன், இயக்குநா்கள் ஏ.ஆா்.துரைசாமி, ஏ.ராமசாமி, எம்.குமரவேல், பி.எஸ்.ஆா். பினாக்கள் கிளாசஸ் இயக்குநா் சாய்ராம், பள்ளி தலைமை ஆசிரியா், முதல்வா் , ஆசிரியா்கள் பாராட்டினா்.

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நாமக்கல் கோட்டத்தில் 20,000 வீட்டுமனை பட்டாக்கள் அளிப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் வருவாய் கோட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்ந்ததால் கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்தனா். பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இ... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்பு காலங்களில் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சாா்பில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிப... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் பொதுக்கூட்டம், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா தலைமையில் 3 கூட... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில்... மேலும் பார்க்க