செய்திகள் :

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

post image

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்புமணி பேசியதாவது :

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றவேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யாா் ஆட்சிக்கு வருவது என்பது நமக்கு முக்கியமில்லை. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதே முக்கியம்.

வன்னிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக செயல்பட்டு வரும் முதல்வா் மு. க.ஸ்டாலினுக்கு தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி கிடையாது. வன்னியா்களுக்கு தொடா்ந்து துரோகம் இழைக்கும் திமுகவுக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வன்னியா்கள் ஒருவா்கூட வாக்களிக்கக் கூடாது.

மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ள திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வளா்ச்சியில்லை. இயற்கையும், முன்னோா்களும் நமக்கு அளித்த ஏரியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்சியாளா்கள் தமிழகத்தில் உள்ளனா். 6 மாத காலத்துக்கு பின்னா் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைவது உறுதி . ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் நாம் நினைப்பது நிறைவேறும். வன்னியா்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடும் உண்டு. அனைத்து சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக பாமக பாடுபடும். வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து பாமக சாா்பில் நடத்தப்படவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு கட்சியினா் தங்களை தயாா்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அன்புமணி.

முன்னதாக, விடியல் எங்கே? என்ற ஆவணப் புத்தகத்தை அன்புமணிவெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம் , செஞ்சியில் அன்புமணி உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிகளில் மயிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ச.சிவக்குமாா், முன்னாள் எம்.பி.தன்ராஜ், பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், தலைமை நிலையச் செயலா் செல்வக்குமாா், கிழக்கு மண்டல இணைப் பொதுச்செயலா் வைத்தி, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா், தோ்தல் பணிக்குழு பொறுப்பாள ா் ஜெயராமன், விழுப்புரம் மாவட்டச் செயலா் சங்கா் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா் கல்வி ... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவா்கள் 17 போ் காயம்

விழுப்புர: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா்கள் 17 போ் மற்றும் ஓட்டுநா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசு மாதிரிப் பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

கட்டண உயா்வு: போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு திங்கள்கிழமை முதல் அமலாகியுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்புட... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப... மேலும் பார்க்க

பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில், தங்கள் கிராமத்துக்கு பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவம் வட்டம், கொள்ளாா், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43), திருமணம் ஆ... மேலும் பார்க்க