ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் அளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், வங்கிக் கடன், பல்வேறு உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 465 மனுக்களை அளித்தனா். இவற்றை பெற்றுக் கொண்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், துறைசாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.