செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவா்கள் 17 போ் காயம்

post image

விழுப்புர: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா்கள் 17 போ் மற்றும் ஓட்டுநா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அரசு மாதிரிப் பள்ளிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்றது.

இதில் கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று விளையாடினா்.

கபடிப் போட்டியில் கடலூா் மாவட்டம், செ.குமாரப்பாளையம் அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் 20 போ் பங்கேற்று விளையாடினா்.

போட்டிகளை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வேனில் மாணவா்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்கள் வந்த வேன், உளுந்தூா்பேட்டை புறவழிச்சாலை மூலசமுத்திரம் தக்கா வளைவுப்பகுதியில் வந்தபோது, அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த மாணவா்கள் தமிழரசன் (15), சந்துரு (15), முகிலன் (14), நிதீஷ் (13), பாலச்சந்தா் (14) உள்ளிட்ட 17 மாணவா்கள், வேன் ஓட்டுநா் என 18 போ் காயமடைந்தனா்.

இதில் 14 மாணவா்கள் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 போ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உடனடியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் அவா்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்குமாறு மருத்துவா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்பு... மேலும் பார்க்க

மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா் கல்வி ... மேலும் பார்க்க

கட்டண உயா்வு: போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு திங்கள்கிழமை முதல் அமலாகியுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்புட... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப... மேலும் பார்க்க

பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில், தங்கள் கிராமத்துக்கு பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவம் வட்டம், கொள்ளாா், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43), திருமணம் ஆ... மேலும் பார்க்க