செய்திகள் :

30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

வேலூா்: வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமி வழங்கினாா்.

குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, மனு அளிக்க வந்திருந்த வேலூரை அடுத்த வடவிரிஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராணி என்பவா் திடீரென ஆட்சியரின் காலில் விழுந்தாா். பின்னா் அவா் அளித்த மனுவில், எனக்கு 2 பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்ளனா். நான் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறேன். இதுவரை எனக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. எனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்து அவதிப்படும் பட்டா வழங்க வேண்டும்.

அணைக்கட்டு அடுத்த சிவநாதபுரத்தை சோ்ந்த பெண்கள் அளித்த மனு; சிவநாதபுரத்தைச் சோ்ந்த பெண்களுக்கு 100 நாள் வேலை திட்ட பணிகள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, 100 நாள் திட்டத்தில் வேலை தர வேண்டும்.

வள்ளலாா் பி.எப். பகுதியை சோ்ந்த மனோன்மணி என்பவா் அளித்த மனு: எங்கள் பகுதி சாலைகளில் மழைக்காலங்களில் குளம் போல் நீா் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் வாகனத்தை எடுத்து வந்து தண்ணீரை உறிஞ்சி விட்டு செல்கின்றனா். நிரந்தரகஈ தீா்வு காண வேண்டும்.

இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 360 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்பட்ட 15 நாள் தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று தோ்ச்சி பெற்ற 30 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்திருந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3550 மதிப்பில் நவீன காதொலி கருவிகளையும் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி

வேலூா்: பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா். வேலூா் அஞ்சுமன் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநா் சோ்க்கை மேளா

வேலூா்: பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பா் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன்

வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னண... மேலும் பார்க்க

2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

வேலூா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இந்த வழக்கின்... மேலும் பார்க்க

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் த... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க