செய்திகள் :

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி

post image

வேலூா்: பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.

வேலூா் அஞ்சுமன் தெருவைச் சோ்ந்த கிசாா் உசேன் என்பவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த மனு:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், புளியங்கண்ணு கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன் மகன் யுவராஜ். எனது கல்லூரி நண்பரான இவா், பங்கு சந்தையில் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருதாகவும், தனது தொழில் தேவைக்காக கடந்த ஜனவரி மாதம் என்னிடம் பணம் கேட்டிருந்தாா். முதலீடாக இல்லாமல் கொடுத்த பணத்திற்கு நிலையான வட்டியாக தருவதாகவும் கூறினாா்.

முதலீடு செய்யும் பணம் இல்லை என்றபோது, தானே வங்கியில் இருந்து கடன் பெற்று தருவதாகவும், அந்த கடனுக்கான மாத தவணை தொகையை மாதந்தோறும் சரியாக அளித்து விடுவதாகவும், ஐந்து வருடத்துக்கு பிறகு மொத்த கடன் தொகையையும் திருப்பி அளிப்பதாக உறுதி அளித்திருந்தாா். அதனடிப்படையில், வங்கியில் இருந்து ரூ.28.90 லட்சம் கடன் தொகை 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கிடைத்தது. அந்த கடன் தொகை முழுவதையும் யுவராஜின் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன்.

எனது முதலீட்டு தொகையான ரூ.28.90 லட்சத்துக்கான மாத வட்டி ரூ.86,700 தரவேண்டிய நிலையில், ஏப்ரல் ஒரு மாதம் மட்டும் ரூ.70 ஆயிரம் அனுப்பினாா். அதன்பிறகு வட்டித்தொகையை அனுப்பாமல் தலைமறைவாகிவிட்டாா். வங்கி கடன் பெற்று முதலீடு செய்த எனக்கு மாத தவணைத் தொகை கட்ட முடியாமல் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுளேன்.

எனவே, தலைமறைவாக உள்ள யுவராஜை கண்டுபிடித்து எனது வங்கிக்கடன் தொகையை மீட்டுத்தர மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனா்.

30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

வேலூா்: வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமி வழங்கினாா். குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநா் சோ்க்கை மேளா

வேலூா்: பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பா் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன்

வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னண... மேலும் பார்க்க

2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

வேலூா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இந்த வழக்கின்... மேலும் பார்க்க

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் த... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க