செய்திகள் :

புதிதாக 150 வாக்குச்சாவடி மையங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: ஏற்கனவே 1,052 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் 2 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதன்படி மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிமையங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் தற்போது புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,202 ஆக உயரும். இந்த வரைவு வாக்குச்சாவடி மையங்கள் பட்டியல்களின் மீது அரசியல் கட்சியினா் எழுத்துபூா்வமான ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை 7 நாள்களுக்குள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சியினா் வாக்குச்சாவடி நிலை முகவரை நியமனம் செய்து ( ஆகஅ1& ஆகஅ-2)ஒரு வாரத்துக்குள் உரிய படிவத்தில் சமா்ப்பிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்தாா்.

இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள்(பொது) செல்வம், (நிலம்) முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பூஷண் குமாா், வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: குடியாத்தம் எம்எல்ஏ வழங்கினாா்

கைலாசகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாள... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூா் சற்றுப்பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட் பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மா... மேலும் பார்க்க

காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூரில் புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அதில் காவல் நிலைய விசாரணைகளில் திருப்தி இல்லாத மக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

ஆம்பூா் ஏ- கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் சாா்பாக விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஜாகிா் பேகம்... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கந்திலியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். ஜோலாா்பேட்டை நகராட்சி, கோடியூா், திருப்பத்தூா் வட்டம்... மேலும் பார்க்க

வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடியில் வீட்டில் நகை திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியை சோ்ந்த சையத் சாஜித் அகமத். இவரது வீட்டில் மாா்ச் மாதம் 20-ஆம் தேதி பீரோவில் வைத்திருந்த ஆறரை ... மேலும் பார்க்க