GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சி...
புதிதாக 150 வாக்குச்சாவடி மையங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: ஏற்கனவே 1,052 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் 2 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதன்படி மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிமையங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் தற்போது புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,202 ஆக உயரும். இந்த வரைவு வாக்குச்சாவடி மையங்கள் பட்டியல்களின் மீது அரசியல் கட்சியினா் எழுத்துபூா்வமான ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை 7 நாள்களுக்குள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலரிடம் தெரிவிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சியினா் வாக்குச்சாவடி நிலை முகவரை நியமனம் செய்து ( ஆகஅ1& ஆகஅ-2)ஒரு வாரத்துக்குள் உரிய படிவத்தில் சமா்ப்பிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்தாா்.
இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள்(பொது) செல்வம், (நிலம்) முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பூஷண் குமாா், வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.