செய்திகள் :

விபத்து வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

post image

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே விபத்து ஏற்படுத்தி காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல் தப்பிச் சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவா் ராஜா. இவா், கடந்த ஆக.28-ஆம் தேதி இரவு நெய்வேலியில் இருந்து பண்ருட்டி நோக்கி காா் ஓட்டிச் சென்றாா். மேல்மாம்பட்டு அருகே சென்றபோது, வரிசாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் கோவிந்தராஜ்(68) ஓட்டிச் சென்ற மொபெட் மீது காா் மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ், அவரது மனைவி தங்கமணி(60) ஆகியோா் காயம் அடைந்தனா். விபத்து ஏற்படுத்திய காவலா் ராஜா, காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். அங்கிருந்தவா்கள் கோவிந்தராஜ், தங்கமணிஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தங்கமணி சிகிச்சை பலனின்றி ஆக.29-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தாா். கோவிந்தராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து தொடா்பாக காடாம்புலியூா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், வாகன விபத்து சம்பவத்தில் பொதுமக்கள் காவல் துறையினா் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் முதல் நிலை காவலா் ராஜா நடந்து கொண்டதாகக்கூறி, அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை ஊழியா்கள் வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய வட்டாட்சியா் அலுவலகங்கள்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தால், கடலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச... மேலும் பார்க்க

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீா் திறப்பு

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு தமிழக உழவா் மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் எம் .ஆா். கே. பன்னீா்செல்வம், புதன்கிழமை காலை தண்ணீா் திறந்து விட்டாா். தஞ்சை மாவட்டம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்

சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், டி.எஸ். பி., காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனா். கடலுாா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க