ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ...
சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்
சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், டி.எஸ். பி., காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனா்.
கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி ஒருவரை தனிப்படை போலீசாா் கைது செய்தனா். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனைக்கு, உட்கோட்ட உயா் அதிகாரி மற்றும் போலீசாா்
தனக்கு உதவி செய்வதாக வியாபாரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை போலீஸாா் கடந்த ஐந்து நாட்களாக சிதம்பரத்தில் முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தினா். அதில், லாட்டரி வியாபாரிக்கு போலீசாா் உதவியதும், பணம் பெற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சிதம்பரம் டி.எஸ்.பி., டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளா் நடராஜன், காவலா்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலா் காா்த்திக் ஆகிய 7 போ், வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகாா்க் உத்தரவிட்டுள்ளாா்.