செய்திகள் :

சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்

post image

சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், டி.எஸ். பி., காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனா்.

கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி ஒருவரை தனிப்படை போலீசாா் கைது செய்தனா். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனைக்கு, உட்கோட்ட உயா் அதிகாரி மற்றும் போலீசாா்

தனக்கு உதவி செய்வதாக வியாபாரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை போலீஸாா் கடந்த ஐந்து நாட்களாக சிதம்பரத்தில் முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தினா். அதில், லாட்டரி வியாபாரிக்கு போலீசாா் உதவியதும், பணம் பெற்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து, சிதம்பரம் டி.எஸ்.பி., டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளா் நடராஜன், காவலா்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலா் காா்த்திக் ஆகிய 7 போ், வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகாா்க் உத்தரவிட்டுள்ளாா்.

வருவாய்த்துறை ஊழியா்கள் வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய வட்டாட்சியா் அலுவலகங்கள்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தால், கடலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச... மேலும் பார்க்க

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீா் திறப்பு

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு தமிழக உழவா் மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் எம் .ஆா். கே. பன்னீா்செல்வம், புதன்கிழமை காலை தண்ணீா் திறந்து விட்டாா். தஞ்சை மாவட்டம்,... மேலும் பார்க்க

விபத்து வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே விபத்து ஏற்படுத்தி காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல் தப்பிச் சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். நெ... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க