செய்திகள் :

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

post image

பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை ஜிஎஸ்டி கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் நிரூபிக்கின்றன என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு தனது பிம்பத்தை உலகிற்கு வெளிப்படுத்திய விதம் குறிப்பிடத்தக்கது. பிரதமர் அனைத்துத் துறைகளிலும் சமமான அக்கறை எடுத்துக்கொள்கிறார். உலகளாவிய கொந்தளிப்பின் தற்போதைய சூழலில் கூட, அவர் தனது நாட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏழ்மையானவர்களைக் கவனித்துக்கொள்கிறார்.

ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள் வரை அனைத்து பொதுவான பயன்பாட்டுப் பொருள்களின் விலையும் குறைக்கப்படும் என்றும் அதே நேரத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரி விகிதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்றும் புதன்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது.

செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் வகையில், 5 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக வரம்புகளை நிர்ணயிக்க ஒப்புதல் அளித்தது. அரசு உள்நாட்டு செலவினங்களை அதிகரிக்கவும், அமெரிக்க வரிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கவும் முயல்வதால், கிட்டத்தட்ட அனைத்து தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருள்களும் விகிதக் குறைப்பு செய்யப்படும்.

மோடி தனது சுதந்திர தின உரையில் மக்களுக்கு விரைவில் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவித்தார். “அவர் சொன்னது போல், அந்த நன்மைகள் (ஜிஎஸ்டி தளர்வுகள்) நவராத்திரியிலிருந்து (செப்டம்பர் 22) நாம் கிடைக்கப்பெறுவோம்.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தும் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் கூறினார்.

ஏழைகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கும் என்று மத்தியப் பிரதேச அவைத்தலைவர் நரேந்திர சிங் தோமரும் மத்திய அரசின் முடிவைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The reforms in GST structure demonstrate Prime Minister Narendra Modi's commitment to the countrymen that he takes care of all, including entrepreneurs, despite the global turmoil, Madhya Pradesh Chief Minister Mohan Yadav said on Thursday.

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க

மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.வெளி மாநிலங்களில்... மேலும் பார்க்க