செய்திகள் :

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

post image

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலை அருகே பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட எண்களும் தமிழில் எழுதப்பட்டுள்ள மைல் கல் ஒன்று யார் கவனமும் பெறாமல் சாதாரணமாக இருக்கிறது.

கன்னியாகுமரியில் கதிரவன் மறையும் காட்சி முனைக்குச் செல்லும் மேற்குக் கடற்கரைச் சாலையை இணைக்கும் அணுகுசாலையில் 'ஜோப்பா ஹவுஸ்' அருகில் இந்த பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த மைல் கல் உள்ளது.

இந்தக் கல்லில் 'CAPE IRELAND' என்றும் ரோமன் எழுத்துருவில் 'LIV' என்றும் தமிழில் மற்றும் தமிழ் எண் உருவில் 'திருவனந்தபுரம் நாழிகை ௫௰௪' என்றும் எழுதப்பட்டுள்ளது. ௫௰௪ என்ற தமிழ் எண் '54' -யைக் குறிக்கிறது.

பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட இந்த மைல் கல் இன்னும் சேதமடையாமல் பொலிவுடன் இருக்கிறது. கன்னியாகுமரி மேற்கு கடற்கரைச் சாலையின் தொடக்கமாகவும் இந்த மைல் கல் இருக்கிறது.

இந்த அரிய மைல் கல் குறித்த தகவல்களை ஆய்வாளர்களிடம் சேகரித்து, இதுபற்றிய விவரங்களுடன் ஒரு பெயர்ப் பலகை வைத்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் பராமரிக்க முன்வர வேண்டும்.

இதுபோன்ற அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதுபற்றிப் பார்த்துப் பதிவு செய்துள்ள பொறியாளர் பா. செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார்.

A milestone written in Tamil during the British era has been discovered near the West Coast Road in Kanyakumari.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ. 30-க்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மது அருந்துபவா்கள் மதுபாட்டில்க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அம... மேலும் பார்க்க

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தலையொட்டிய தனது சுற்றுப்பயணத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அரச... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: அமல்படுத்த உத்தரவு!

தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2007 முதல் 2009 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1... மேலும் பார்க்க

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் இபிஎஸ்: தங்கம் தென்னரசு

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு நேற்று(செப். 3) அறிவிப்பு வெள... மேலும் பார்க்க

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

திருப்பூர்: அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி என்று விஞ்ஞானி அசோக்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கேய... மேலும் பார்க்க