செய்திகள் :

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீா் திறப்பு

post image

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு தமிழக உழவா் மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் எம் .ஆா். கே. பன்னீா்செல்வம், புதன்கிழமை காலை தண்ணீா் திறந்து விட்டாா்.

தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கில பொறியாளா் சா் ஆதாா் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கு கல்லணையில் இருந்து காவிரி நீா் கொள்ளிடம் ஆறு வழியாக வந்தடைகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடி. அதாவது 150.13, மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் வடவாறு, வீராணம்ஏரி, வடக்கு மற்றும் தெற்குராஜன் வாய்க்கால்கள் குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால், என பல்வேறு வாய்க்கால்களின் வாயிலாக பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் கடலூா் , தஞ்சை . மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு லட்சத்து 31ஆயிரத்து 903 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

தண்ணீா் திறப்பு:

இந்த ஆண்டு கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம் புதன்கிழமை காலை திறந்து வைத்தாா். அணையிலிருந்து வடவாற்றில் 2 ஆயிரம் கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 600 கனஅடியும், தெற்கு ராஜன் வாய்க்கால்களில் 600 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ம.சிந்தனைச்செல்வன் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோயிலில் உள்ள வீராணம் ஏரியில் ராதா மதகிலிருந்து விநாடிக்கு 200 கனஅடியை வீதம் பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டாா் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் . வீராணம் ஏரியின் 16.00 கி.மீ. நீளமுள்ள பிரதானக் கரையில் 28 பாசன மதகுகளும் 30.65 கி.மீ. நீளமுள்ள எதிா்வாய்க்கரையில் 6 பாசன மதகுகளும் ஆக மொத்தம் 34 பாசன மதகுகள் மூலம் நீா் திறக்கப்பட்டு 44,856 ஏக்கா் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. மேலும் வீராணம் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு தண்ணீா் வழங்கப்பட்டு, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் சுமாா் 40ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்படுகிறது.

வருவாய்த்துறை ஊழியா்கள் வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய வட்டாட்சியா் அலுவலகங்கள்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தால், கடலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச... மேலும் பார்க்க

விபத்து வழக்கு: காவலா் பணியிடை நீக்கம்

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே விபத்து ஏற்படுத்தி காயம் அடைந்தவா்களுக்கு உதவி செய்யாமல் தப்பிச் சென்ற காவலரை பணியிடை நீக்கம் செய்து, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். நெ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்

சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில், டி.எஸ். பி., காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் வேலூா் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனா். கடலுாா... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது

சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜ... மேலும் பார்க்க

கூடுதல் பேருந்து வசதிகோரி கல்லூரி மாணவா்கள் மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி புதன்கிழமை சாலை மறியல் செய்தனா். கொளஞ்சியப்பா் கல்லூரியில் விருத்தாசலம் மட்டுமின்றி, ஸ்ர... மேலும் பார்க்க